கீரை தால் ஃப்ரை (கீரை தக்காளி பருப்பு):
(படங்கள் இன்னும் வலையேற்றப்படவில்லை)
தேவையான பொருட்கள்:
பசலைக் கீரை/Spinach - 1 கட்டு
பயத்தம்பருப்பு - 1/2 கப்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 1 அங்குலத் துண்டு
கருவேப்பிலை - 1 ஆர்க்கு
மஞ்சள்பொடி - சிறிதளவு
தாளிக்க:
கடுகு
உளுத்தம்பருப்பு
பெருங்காயம்
செய்முறை:
- முதலில் பயத்தம்பருப்பை குக்கரில் (குழையாமல்) வேகவைத்துக் கொள்ளவும்.
- தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- கீரையையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தை தாளித்துக் கொள்ளவும்.
- பொடியாக நறுக்கிய தக்காளி + பச்சைமிளகாய் + இஞ்சியை போட்டு மஞ்சள்பொடி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் நறுக்கிய கீரையை சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும். கீரை வெந்தவுடன், கரண்டி அல்லது மத்தினால் நன்கு மசிக்கவும்.
- தேவையான் அளவு உப்பைப் போட்டு, வேகவைத்த பருப்பையும் சேர்த்து சிறிது நேரம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும்.
- கறிவேப்பிலையை கடைசியில், அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன்னால் போட்டால் மிகவும் வாசனையாக இருக்கும்.